கதைவீதி - அறிமுகம்
கதை வீதிக்கு வருகை தரும் அனைவருக்கும் எம் இதயம் நிறைந்த வரவேற்பு ! வாழ்த்துக்கள் ! நன்றி !
இந்தக் கதை வீதியை வலையத்தில் தொடங்கியிருக்கும் காரணம், நாமறிந்த அனைத்து எழுத்தாளர்களின் கதைகளையோ/கவிதைகளையோ, கதை/கவிதைகளின் பகுதியையோ, சாராம்சத்தையோ - எதை வேண்டுமானாலும் நாம் மனமாரப் பகிர்ந்து கொண்டு, அவற்றைப் பற்றி உரையாட, ஒரு சிறந்த மேடையாக இது திகழ வேண்டும் என்பதுதான்.
இங்கு மொழி ஒரு தடைக்கல் அல்ல. எந்த மொழியின் கதைகளும்/கவிதைகளும் , விஷயங்களும் வரவேற்கத் தகுந்தவையே !
அனைவரும் தயை கூர்ந்து இதில் பங்கேற்று, இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம் !
2012 இலேயே சிந்தையில் விதைக்கப்பட்ட வித்து , இன்றுதான் உருக்கொள்ளுகிறது :-)
வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம். 'கதை வீதி' ப்ளாக்கிற்கு அழகான பெயர். கதைகள் சங்கமிக்க ஓர் அழகான இடத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். மிக ஆரோக்கியமான விஷயம். இந்த சீரிய முயற்சி மென்மேலும் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
ReplyDelete