Saturday, November 23, 2019

"ஒளி" - எழுதியவர் : சுசித்ரா

https://solvanam.com/2019/11/10/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/

"சொல்வனம்" இணையதளத்தின் பதிவு சுசித்ரா அவர்கள் எழுதிய "ஒளி"  என்ற சிறுகதை ! 

கவிதையாக நிறைந்தன அத்தனை வரிகளும்! ஒவ்வொரு காட்சியும் கண்முன்னே விரிந்து மயிலாகப் பறந்து நடனமாடின! மதுரையும், கோவிலும், சொக்கனும், சொக்கியும், பச்சை நிறமும், பசுமைப் புல்வெளியும், நீலவானமும், நெடிதுயர் குன்றமும், ஒவ்வொன்றையும் கண்ணாரக் கண்டு நடித்தேன். அசாதாரணமான, அதே சமயம் தெளிவான நடை. தேர்ந்த எழுத்து. தொட்டும் தொடாமலும் காட்டப்படும் பொங்கிவரும் உணர்வுகள் ! தொய்வற்ற ஓட்டம் ! எங்குமே அலுப்புத் தட்டாத எழுத்தும் நடையும் !  வசீகரிக்கும் வார்த்தை ஜாலங்கள் ! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மகிழ்ந்து போனேன் !என்னை நான் மறந்து போனேன் !  தொடர்க! வளர்க!

No comments:

Post a Comment